கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் |
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3240 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 1448, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 463 வாக்குகளையும், சுயேட்சைக்குழு 08 – 170 வாக்குகளையும் பெற்றுள்ளது. |
-
9 செப்., 2012
கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்! - பொலனறுவைய. இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு.கூ. முன்னணியில்!
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
8 செப்., 2012
மட்டக்களப்பு தபால் மூல வாக்களிப்பில் தமிழரசுக்கட்சி வெற்றி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி, மெதடிஸ்த மத்தியகல்லூரி ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமற்ற வகையில் எமக்கு கிடைத்த முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 3,219
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1,428
முஸ்லிம் காங்கிரஸ் 454
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 170
ஐக்கிய தேசியக் கட்சி 63
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்- தபால் மூல வாக்களிப்பு முடிவு
கிழக்கு மாகாண தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தபால் மூல வாக்களிப்பில் முன்னணியில் உள்ளது. அம்பாறையில் இரண்டாம் இடத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சமனான நிலையில் உள்ளன.
கனடாவில் நடைபெற்ற தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுக் குழு, கனேடிய தமிழர் விளையாட்டுத் துறையுடன் இணைந்து நடாத்திய தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி.. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, (01 - 09 - 2012 ) L'Amoreaux விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக
தேர்தல் களமும், தாயகத் தமிழரின் பங்கும்
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவதன் மூலம் சிங்களப் பேரினவாதம் தனது யுத்த வெற்றியாக வெளிக்காட்ட முற்படுவதோடு, தனது நீண்டகால நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழர் நிலப்பரப்பை அபகரித்து, அதில் சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்த விகாரைகளையும் அமைத்து சிங்கள பௌத்த தேசமாக்குவதற்கே முனைகிறது.
இதற்கு தமது திட்டங்களுக்கு இசைந்து போகும் சில சுயநலம் கொண்ட தமிழினத் துரோகிகளை கைப்பொம்மைகளாக வைத்து சிங்களப் பேரினவாதம் செயற்படுகிறது.
இத்தேர்தலில் பங்குகொள்வதன் ஊடாக எமது மக்களுக்கான விடுதலையையோ அல்லது இதற்கான அடிப்படைக் காரணிகளையோ ஏற்படுத்த முடியாது என்பது யதார்த்தம். இருப்பினும் தனது அதிகார பேரினவாத வெளிப்பாடாக மக்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி சிங்கள அரசு நடாத்தும் இத்தேர்தலை புறக்கணிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளாக ஆளும் சூழலையோ அல்லது வாய்ப்பினையோ நாம் வழங்க முடியாது.
கலாசார சீரழிவு, பாலியல் வல்லுறவு, நில ஆக்கிரமிப்பு, காணாமல் போதல்கள், தற்கொலை எனும் பெயரால் நடக்கும் படுகொலைகளென நாளாந்தம் சொல்லொனா துயருக்குள் மக்களாகிய உங்களை வைத்து வதைக்கும் சிங்களப் பேரினவாதம், இத்தேர்தல் வெற்றி ஊடாக தமிழர்களை ஆளும் அதிகாரத்தையும் பெற்று மேலும் தமிழின அழிப்பையும், நில அபகரிப்பையும் துரிதகதியில் நடாத்தி சிங்கள மயமாக்கலுக்கு முனைகிறது.
இச்சூழலில் பிரதேசவாதத்தினையும், இன்னும் சில காரணங்களையும் முன்வைத்து இத்தேர்தலில் தாம் வெற்றிபெற வேண்டும் என்று சிலர் முற்படுவதினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான விடையங்கள் வடக்கு, கிழக்கினை பிரிப்பதுடன் தமிழர்களின் தார்மீக விடுதலையையும் நசுக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும். இவ்வாறான எண்ணத்துடன் நடாத்தப்படும் இத்தேர்தலில் தமிழ்த் தேசியத்தினை மறுதலிப்பவர்களை புறந்தள்ளி தமிழ்த்தேசிய உணர்வுடன் விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்து எமது உறுதியையும், உரிமையையும் வெளிக்காட்டும்படி அன்புரிமையுடன் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் விடுதலை உணர்விற்கும் தேசிய ஒற்றுமைக்கும் புலம்பெயர் தமிழீழ மக்களாகிய நாம் என்றும் துணையாக நிற்போம்.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
|
குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராஜபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.
பதிலுக்கு பசில் ராஜபக்சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.
இதன் விளைவால் பசில் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)