சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் காலமானார். 86 வயதான பால்தாக்கரே கடந்த ஒரு மாதமாக உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.பால்தாக்கரேவின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
18.11.2012 காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 3 அளவில் பால்தாக்கரேவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு: தொண்டர்கள் கண்ணீர் அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.
பால்தாக்கரே இன்று பகல் 3.33 மணிக்கு மரணம் அடைந்தார் .அவரது கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் .இதை ஒரு காரணமாக வைத்து வன்முறை விதைக்க முற்படாமல் அமைதி காக்க வேண்டும் . இந்த செய்தியை தந்தி டிவி முதலில் சொன்னது
இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட பின்னர் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று இலங்கை இராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
கேணல் பரிதி படுகொலை தொடர்புடன் சம்பந்தப்பட்ட விநாயகம் பிரான்ஸில் கைது
விடுதலைப் புலிகளின் மற்றும் ஒரு பிரிவின் தலைவர் என கருதப்படும் விநாயகம் இவ.இவரைப் பற்றி தமிழ்த்தாய் இணையம் இவ்வாறு கூறுகிறது (புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களை பிரிவு படுத்தி தேசவிடுதலையை மழுங்கடிக்கவும் தேசிய மாவீரர் நாளையும் குழப்புவதற்கும் கோத்தபாயவினால் தயார்படுத்தப்பட்டு தலைமைசெயலகம்
ஒருபுறம் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கவலைகள் சூழ்ந்தபோதும் அதை சம்ஹாரம் செய்து விட்டு மறுபுறம் புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கி விட்டார் கமல்.
வெள்ளவத்தை மகேஸ்வரி ஒழுங்கையில் கடந்த வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
சிராணி விவகாரம்: பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க பல நாடுகள் தீர்மானம்?
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்றப் பிரேரணையை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இலங்கையில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம், பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐநாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம்
பிரித்தானியைவைச் சேர்ந்த ஐநாவின் மூத்த அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி தயாரித்த அறிக்கையை கொண்டு சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
41 இலட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் 6ஆம் திகதி புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம்
41 இலட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரியில் நடைபெறுமென கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி