புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013


ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணப் பட்டியல் : இம்மாத இறுதிக்குள் வெளியாகும்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு? என்ற பட்டியல் இம்மாத

6ஆவது ஐ.பி.எல். : பெங்களூர் - மும்பை அணிகள் நாளை மோதவுள்ளன

ஐ.பி.எல்.போட்டியின் 2-வது லீக் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.


வட மாகாணசபை தேர்தலுக்கு முன் பொலிஸ், தேர்தல் ஆணைக் குழுக்களை நியமிக்க வேண்டும் : சுமந்திரன் எம்.பி.

வட மாகாணத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறவேண்டுமாயின் அரசாங்கம் முதலில்


அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை


இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.


எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம் : மனோ கணேசன்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து


மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் மீன்களும் விமானநிலையத்தில் குருவிகளுமே பிடிபடுகின்றன : அசாத் சால


உலக நாடுகளிடம் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறப்படுகின்ற நிலையில் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது-வீரகேசரி 

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன்


வடகொரியா -அமெரிக்க பதற்றத்தில் சீனாவின் போர் விமானம் 
தென்கொரியாவோடு அமெரிக்கா இணைந்து அப் பிராந்தியத்தில் போர் ஒத்திகை பயிற்சிகளை நடத்த ஆரம்பித்தது. அப்படியே பயிற்சிகளை நடத்திவிட்டுச்


மன்னையில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம்! 
ர.ர.க்களின் குமுறல்கள்!!
மதிப்பிற்குறிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திருவாரூர் மன்னார்குடியில் உள்ள கழகத்தின் உண்மை ரத்தத்தின் ரத்தங்கள் எழுதும் கடிதம்.


சினிமா பார்த்து கொலை செய்தோம் :
சாந்தி கொலையாளிகள் வாக்குமூலம் 
நன்றி நக்கீரன் 

தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம் 
 துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.


காங்கிரசை நாடு கடத்த வேண்டும் : சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்
இன்று ஆரம்பமான ஐ பீ எல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் கல்கத்த அணி டெல்லி அணியை 6 விக்கெடூகலினால் வென்றுள்ளது

Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 129/4 (18.4/20 ov)

3 ஏப்., 2013


இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு நேரக்கூடாது!- பிரதமருக்கு வைகோ கடிதம்

துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த போது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத் தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத் தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப் போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர்.
இதே போன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்குள்ளான காட்சியை சனல்4  தொலைக்காட்சி காணொளி மூலம் 2010ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரிணியும் கொல்லப்படுவார்.
எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹரிணி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும், ஜஸ்வந்த் சிங்கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்துள்ளார்.
இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு வராத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உட்பட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர்

நேரடி தகவல் 
Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 51/1 (6.4/20 ov)

ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: திண்டுக்கல் லியோனிக்கு நோட்டீஸ்

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட இரண்டு பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல.

ரமேஷ் கன்னா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.

ad

ad