ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது-வீரகேசரி
ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன் மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறி;த்த நபர்கள் 100க்கும் மேற்பட்ட ஏ.ரீ.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பத்து மில்லியன் தாய் பாத்களை மீளப்பெற்றுக்கொண்டுள்ளனர்.போலியான ஏ.ரீ.எம் அட்டைகளை பயன்படுத்தி தாய்லாந்து வங்கிகளில் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
சாசீலன், சுதர்சன் நடராஜ் ஆகிய இலங்கையர்களும், தாசீகுமார், அந்தோனிசாமி, ஈஸ்வரன் குமரன், ஜோதி சங்கர் மற்றும் துரைசாமி ஆகிய மலேஷியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.