புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013


ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது-வீரகேசரி 

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன்
மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறி;த்த நபர்கள் 100க்கும் மேற்பட்ட ஏ.ரீ.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பத்து மில்லியன் தாய் பாத்களை மீளப்பெற்றுக்கொண்டுள்ளனர்.போலியான ஏ.ரீ.எம் அட்டைகளை பயன்படுத்தி தாய்லாந்து வங்கிகளில் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

சாசீலன், சுதர்சன் நடராஜ் ஆகிய இலங்கையர்களும், தாசீகுமார், அந்தோனிசாமி, ஈஸ்வரன் குமரன், ஜோதி சங்கர் மற்றும் துரைசாமி ஆகிய மலேஷியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 162 ஏ.ரீ.எம் அட்டைகளும், 18000 தாய்லாந்து பாத்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, ஜெர்மனி மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பணம் இவ்வாறு போலி அட்டைகள் பயன்படுத்தப்பட்டு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
.

ad

ad