கொமாண்டர் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை: ஆணைக்குழுவிடம் சாட்சியம்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.