புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும்!- வசந்த பண்டார
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முதலமைச்சரின் அனுமதியுடன் 3 மாத விடுமுறையில் வெளிநாடு செல்ல முடியும்.

அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இதனை தடுக்க அரசாங்கத்தால் முடியாது. ஏனென்றால் அவர் பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர் அல்ல. மக்களால் தேர்தலில் ஜனநாயக ரீதியில் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
எனவே இதனை தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது. ஆனால் அனந்தி சசிதரனுக்கு உள்ள உரிமையை ஜெனிவாவில் அவர் பிழையாக பயன்படுத்துவார்.
எனவே, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணத்தை அங்குள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக பயன்படுத்திக் கொள்வது நிச்சயமாகுமென எச்சரிக்கை விடுக்கிறேன்.
அவரால் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் ஜெனிவாவில் இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அனந்தியை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தி அவரிடமிருந்து இலங்கைக்கு எதிரான கருத்துக்களையும் தகவல்களையும் பெற்றுக்கொண்டு அதனை அறிக்கையாக தயாரித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும்.
இது நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும்.
 அதேவேளை, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இலங்கைக்கு எதிரான அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad