மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.