சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.