புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை: திண்டுக்கல் நகரில் பரபரப்பு


பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். அதிமுகவைச் சேர்ந்த இவர் 10வது வார்டு பிரதிநிதியாகவும், வட்டி தொழிலையும் செய்து வந்தார். இவர் திங்கள்கிழமை மதியம் தனது வீட்டில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் வீட்டில் நுழைந்துள்ளனர். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததுள்ளது. வாய்த்தகராறு முற்றியதால், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து கை, தோள் பட்டையை வெட்டியவுடன் கத்திய படியே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார் செல்வமுருகன். அவரை பின்னால் தொடர்ந்து வந்த மற்றொருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியதில் வீட்டிற்கு முன்பாகவே சம்பவ இடத்திலேயே செல்வமுருகன் துடிதுடிக்க உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல்நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

செல்வமுருகனின் மனைவி பிரியதர்ஷினி கூறும்போது, எதிர்வீட்டைச் சேர்ந்த செல்வாவும் அவனுடன் வந்த மற்றொருவரும்தான் என் வீட்டிற்கு வந்தவர்கள். என் கணவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். நானும், எனது தாயும் தடுக்க முற்பட்டபோது எங்களை கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர் என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் காவல்துறை எஸ்.பி.யாக சரவணன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இரவு பகல் பாராமல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தியும், இப்படி பட்ட பகலில் நடந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

ad

ad