புங்குடுதீவு மடத்துவெளியில் இராணுவத்தினர் சோதனை
தமிழர் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடங்கியிருக்கும் இராணுவ சோதனை தடைகளை தொடர்ந்து புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு சந்தி பிரதான வீதியில் இரவு வேளைகளில் தடைகளை வைத்து இராணுவத்தினர் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .அத்தோடு இரவு வேளைகளில் இ றுபிட்டி கேரதீவு ஊரதீவு மடத்துவெளி வீதி , மடத்துவெளி குறிகாட்டுவான் வீதி ,இறுபபிட்டி பெருங்காடு வீதிகளில் ரோந்து பணிகளில் ஈ டுபடுகின்றனர் இந்த சோதனை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அவஸ்த்தையை கொடுத்த போதும் சமூக விரோத செயல்களில் ஈ டுபடுவோருக்கு பெரும் தலையிடியை உண்டுபண்ணியுள்ளது கள்ள மாடு வெட்டுதல் கடத்துதல் மதுபோதையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடல் .குடியில்லாத வீடுகளில் பொருட்களை பிடுங்கி வி ற்போர் .போன்ற சமூக விரோத செயல்பட்டுகளுக்கு தடையாக உள்ளன