அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்கம் 34 ஷரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இந்த இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு வழங்க முடியுமா என்பதை ஆராய மரண தண்டனை விதித்த மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜனாதிபதி அறிக்கைகளை பெறவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது