கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இதுபோல் பிரச்சினைகள் இருப்பதால் சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான கவனம் செலுத்தாமல், அனைத்து பிரச்சினைகளையும் சேர்த்து ஒரு தீர்வை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
எனவே தான் சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியான விசேட வர்த்தமானி மீளப்பெறப்படுகிறது என்றார் அமைச்சர்.