புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012

பாம்புடன் பரபரப்பை ஏற்படுத்திய இரவு நாயகியின் புதிய குற்றச்சாட்டு!

  
 

நாட்டில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பாம்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட நிரோசா விமலரத்ன தனது பாம்பு சரியாக பராமரிக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது பாம்பினை மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த அதிகாரிகள் உரியமுறையில் பராமரிக்கவில்லையெனவும் தான் அதனை நல்ல படியாக வளர்த்து வந்ததாகவும் நிரோசா தெரிவித்துள்ளார்.


பாம்பிற்கு வலுக்கட்டாயமாக அதிகாரிகள் உணவளித்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட காயங்களையும் அதன் உடலில் காணமுடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் குரங்கொன்றையும் வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad