புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012


வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு


வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவகர் என தெரிவிக்கப்படும் வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது.
சோபாய புளியங்குள தமிழ் மக்கள் அறிய வேண்டியது முஸ்லிம் மக்களின் (சாம்பைக் குளம்) காணிகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என தெரிவிக்கின்றே. இப்படிக்கு இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன்.
இவ்வாறு அந்த அறிவித்தலில் காணப்படுகின்றது.   இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட எம்.பி. அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ad

ad