புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012

ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதி யுத்தத்தில் காணவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை காணவில்லையென இலங்கைக்கான பி.பி.சி.யின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை தவிர்த்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை அரசு பதிலளித்தே ஆகவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad