புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

நகைக்கடையில் திருடியவர்களை 20 நாட்களின் பின்னர் காட்டிக்கொடுத்த கமெரா- யாழ்.நகரில் சம்பவம
யாழ்.நகரிலுள்ள நகைக்கடையொன்றில் திருடிய இரண்டு பெண்களை 20 நாட்களின் பின்னர் கமெரா காட்டிக் கொடுத்த சம்பவம் பெருபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடையில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் நகையை வாங்க வருவது போல வந்து நகையைக் திருடிக்கொண்டு சென்றனர்.
சுமார் 150 ஆயிரம் ரூபாவிற்கும் மேலதிகமான பெறுமதியை உடைய இரண்டு தங்க நகைகள் இவர்களால் திருடப்பட்டது.
கடையில் உள்ள வர்த்தகர்கள் நகையை காண்பித்துக் கொண்டிருந்த போது தண்ணீர் கேட்டுள்ளனர். ஊழியர் தண்ணீர் எடுக்கச் சென்ற போது அங்கிருந்து நகையுடன் தப்பி வந்துள்ளனர்.
இவர்களது புகைப்படங்களும் காணொளிகளும் நகைக்கடை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கடையொன்றில் வைத்து இவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் இருவரும் யாழ்.பொலிஸாரிடம் வியாபாரிகளால் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad