புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: சிறீதரன் எம்.பி
கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செயலாளர் பாஸ்கரா உட்பட பலரின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கூட்டமைப்பு பிரசார பணிகளை மேற்கொண்டிருந்தது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் மலையகம் சார் பிரதிநிதியை நியமிக்காத சந்தர்ப்பத்திலும் எமக்காக தலைவர் மனோகணேசன் அவர்களும், ஊடகச் செயலாளர் பாஸ்கரா அவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எங்கள் பெருவெற்றிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியவர்கள்.  நடைபெற இருக்கும் கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான ஆதரவை அளிப்பது எமது தார்மீக கடமையாகும்.
தமிழ் மக்கள் அழிக்கப்படும் காலங்களில் எல்லாம் கொழும்பில் இருந்து எமக்காக குரல் கொடுத்த தலைவர் மனோ கணேசனுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் கொழும்பு உட்பட்ட மேல் மாகாண தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை நிச்சயமாக வழங்குவார்கள் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கையுண்டு.
மேலும் தமது முற்றுமுழுதான ஆதரவு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு என்றும் உண்டு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

ad

ad