புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


இலங்கையில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஐ.நா நிபுணர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வெற்றிடமாகியிருக்கும் ஐ.நா. சுயாதீன நிபுணர் பதவி ஒன்றுக்கே அவர் விண்ணப்பித்துள்ளதாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.
மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது 
சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து  கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
விரட்டி விரட்டிக் கலைத்து நடுவீதியில் வாள் வெட்டு; இளைஞர் படுகாயம்; பூநாறி மரத்தடியில் கொடூரம் -ஆவா  குழுவின் அட்டகாசம் 
முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்களை கொக்குவில் சந்தியிருந்து விரட்டிய பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று, பூநாறிமரம் பகுதியில் வைத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.உமாநாத் அவர்கள் 21.05.2014 புதன்கிழமை காலை 7.15 மணி அளவில் காலமானார்.

யாழ்.மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு
2013ம் ஆண்டின் வாக்காளர் மதிப்பீடுகளின்படி யாழ். தேர்தல் மாவட்டத்தின் தொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 ஆக காணப்படுகின்றது.

மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோருமாறு முஸ்லிம் அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இலங்கை தௌஹீட் ஜம்மாத் அமைப்பின் செயலாளருக்கு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த கலந்து கொள்வார் என தெரிய வருகிறது 
எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் பெரும்பாலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தடைகளையும் தாண்டி, இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி ஆசிரியர் தற்கொலை! இன்று கல்லூரி இயங்கவில்லை
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி விடுதியில் தங்கியிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியளவில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை


தீர்மானமெடுக்கும் அரசாங்கத்தின் உரிமையை பயங்கரவாதத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது

ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்' பாக். ஜனாதிபதியிடம் தெரிவி;ப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் தர்க்க ரீதியானதல்ல; சர்வதேச அரங்கில் எப்போதும் ஒத்துழைப்போம் - பாக். ஜனாதிபதி

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் நிராகரிப்பு

எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வந்தாலும் முகம்கொடுக்க தயார்
கொள்கலன்கள் சோதனையிடப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறு
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசு சபையில் பதிலளிப்பு


போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம் என்பவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொற்றா நோய்களை தவிர்க்கும் வகையில் இராணுவத்தின் மருத்துவ பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் என்ற தொனிப் பொருளிலாளான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
  இன் நிகழ்வில் ஆரோக்கியமான படை வீரர்களை உருவாக்கும் நோக்குடன் நச்சு மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தாத மரக்கறி வகைகளை
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்களை இணைக்கத்திட்டம் 
சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமையவின் செயலாளர்  

குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி  
பிரதமராக பொறுப்பேற்க வசதியாக, குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி நாளை புதன்கிழமை ராஜிநாமா (மே 21) செய்கிறார்.

அகிலேஷ் யாதவ் அதிரடி : 36 கட்சி நிர்வாகிகளை நீக்கினார்

நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்வியை  அடுத்து உ.பியில் , சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகிகள் 36 பேரை நீக்கி அம்மாநில முதல் மந்திரியும்  சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad