புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

வெள்ளத்தில் சிக்கிய இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்

சென்னைக்கான 9 விமான சேவைகள் எதிர்வரும் நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை பயணிக்கவிருந்த 9 விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் மற்றும் மிஹின்லங்கா ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் கடந்த இரண்டாம் திகதி முதல் சென்னைக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, சென்னையில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தகயாவிற்கு வழிபாடுகளுக்காக சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு வெள்ளத்தில் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை அழைத்து வருவதற்கான விஷேட விமானம் நாளை இந்தியாவின் காயா நோக்கி புறப்படவுள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad