புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2019

எனது பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை இல்லை! வர்த்தமானியில் அறிவியுங்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வி நிறுவனம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இன்று கண்காணிப்புக்காக அந்த பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உயர் கல்வி அமைச்சில் பட்டமளிப்பு நிறுவகத்துக்கான பிரிவில் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி ஊடாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என தெரிவித்த அவர், இதன் காரணமாக பல்கலைக்கழகத்தை அரசாங்கங்கத்தால் சுவீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், சைட்டம் கல்லூரி வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டதன் மூலமே அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும் அவ்வாறு வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad