நாட்டு மக்களிடையே அகெளரவத்தை சம்பாதித்தவரென்ற வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகளை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.தே.க. கோரிக்கை விடுப்பதாக அமைச்சரும் கட்சி பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கெளர வத்துடன் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அலுவலகம் வாகனங்கள் மற்றும் சலுகைகளை மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு