புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை தமிழ்மக்களைக் கேட்டுக் கொள்கிறது!

ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

சென்னையில் நாளை நடக்கவுள்ள சர்வதேச நெசவாளர் தினவிழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்

சசிபெருமாளின் உடலை வைகோவுடன் சென்று பெற்ற உறவினர்கள்




மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ரகானே அசத்தல் சதம்: முதல் நாளில் இந்தியா 314 ஓட்டங்கள் சேர்ப்பு


இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில்  இந்தியா 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா -


வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது

போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காது இலங்கை அரசு! - வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ராஜித மீண்டும் கருத்து


இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்,

ஜெயலலிதாவின் மானப்பிரச்சினை /காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!- ஜெயலலிதாவின் சட்டத்தரணி வாதம்


மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

6 ஆக., 2015

மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிரான வழக்கு; வைகோ ஆலோசகர் - பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவிப்பு


தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் திருவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு இன்று (5.8.2015) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜோயல்

அச்சுறுத்தலாம், மிரட்டலாம் என ஜெ. அரசு தப்புக் கணக்குப் போடுகிறது: விஜயகாந்த் கைதுக்கு வைகோ கண்டனம்



மது ஒழிப்பு மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக மதிமுக

மதுரை மத்திய சிறையிலிருக்கும் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் காளை லிங்கம், தமிழரசன், சான்மார்டின், கவியரசன், கார்த்திக்விடுதலை

ஒன்றரை ஆண்டுகள் தமிழ்த் தேசியத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து போராடி உழைத்தமைக்காக சிறை வைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சி

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்: விஜயகாந்த் கைது; தேமுதிகவினர் மீது தடியடியால் பதட்டம்!


 மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அக்கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க. சார்பில் கடந்த இரு

கொழும்பில் கொலை செய்யபட்ட கார்த்திகாவின் கள்ளக்காதலன் மன்னாரில் கைது

மன்னார் இலுப்பைக்கடவை கோவில் குளம் கிராமத்தில் மேசன் வேலை செய்து வந்தாஹ் இவரை விசாரித்த போது மூன்று வருடங்களாக

மது போதையில் தாய் கொலை: பரிதவித்து கிடக்கும் குழந்தைகள்!

மது போதையில் மனைவியை கொலை செய்து, இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தப்பிச் சென்ற கட்டிட தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!


மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தி உயிரிழந்த காந்தியாவதி சசிபெருமாள் உடலை வாங்க அவரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சேலம் அருகே உள்ள சசிபெருமாள் சொந்த ஊரான மேட்டுக்காட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுக்காட்டில் சசிபெருமாள் உறவினர்கள் நடத்தும் மதுவிலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  

டாஸ்மாக்கை மூட டவரில் ஏறிய தொழிலாளி: ஏமாற்றி இறக்கிய போலீஸ்!



நெல்லை மாவட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி டவர் மீது ஏறிய தொழிலாளியை காவல்துறையினர் ஏமாற்றி கீழே இறக்கி கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ளது சுந்தரபாண்டியபுரம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துவரும் சூழலில், இந்த கிராமத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்க தொடங்கி உள்ளது.

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை!



ஆந்திரா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம்,  ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசாகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர அரசின் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச்

லிபியாவில் படகு விபத்து: 25 பேர் பலி




லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பியாவிற்கு பிழைப்பு தேடி 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல்

உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யு. BMW நிறுவனத்தின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் காலமானார்



உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் பதினோராவது இடத்தைப் பிடித்த பி.எம்.டபிள்யு-வின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் தனது 89-ஆவது

3000 மது கடைகளை மூட பரிந்துரை



தமிழகம் முழுவதும் 3,000 மதுபானக் கடைகளை மூட அரசுக்கு போலீஸ் பரிந்துரை, தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு

ad

ad