நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்த வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது,
வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது.
விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.
தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் போராட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்தார். ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே
ழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல்லைப்பிட்டிச் சந்தியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கடைசி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.
tநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மடிகணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால், அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார்.
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 18 வது தடவையாக நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம்
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது.இதற்காக, 10 ஆயிரம் மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.