புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


சென்னை டெஸ்ட்: சேவாக்குடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்?
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்திய வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் காம்பீர் மோசமான ஆட்டத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
நீண்ட நாட்களாக சேவாக்கும் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். தற்போது காம்பீர் இல்லாத காரத்தினால் இந்த இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்று கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
 
ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் விளையாடிய முரளி விஜய், தவான் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய பயிற்சி ஆட்டத்தின்போது இருவரது செயல்பாடும் சிறப்பாக அமைந்தது. ஆகையால் யாரை தேர்வு செய்வது எனத் தேர்வாளர்களிடம் குழப்பம் நிழவுகிறது.
 
தவான் இடது கை பேட்ஸ்மேன். ஆகையால் வலது கை பேட்ஸ்மேன் சேவாக்குடன் சேர்ந்து ஆட்டத்தை தொடங்கலாம். இல்லாவிடில் சொந்த மைதானம் என்பதால் முரளி விஜய் சேவாக்குடன் களம் இறங்கலாம். இருந்தாலும் சேவாக்குடன் விளையாடுவது யார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல் தெரிகிறது.

ad

ad