புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


திருச்சியில் சிங்கள எம்.பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : நாம் தமிழர் 12 பேர் கைது
சிங்கள எம்பி ஆர்.கே.பி. கேமேஜ்,  சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார்.  அப்போது அவர் ஆலய விடுதியில் தங்கியிருந்தார்.
இதை அறிந்த திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விடுதி முன்பு திரண்டு எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கள எம்பிக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் திருக்கடையூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.   அவர் காரில் இருந்து புறப்பட்டபோது, காரை நோக்கி கற்களை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தங்கியிருக்கிறார்.  இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட பொருப்பாளர் பிரபு தலைமையில் ஓட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஓட்டலின் மீது முட்டைகளை வீசி  எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் நாம் தமிழர் கட்சியினர் 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ad

ad