புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!

 இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவுக்கு இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விமானங்கள் பறக்கும்போது வை-ஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி வருகின்றன. இந்த வசதியை இந்திய விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடைய, விமானத்துறை அமைச்சகமும், விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி செய்வது குறித்து டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad