இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விமானங்கள் பறக்கும்போது வை-ஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி வருகின்றன. இந்த வசதியை இந்திய விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடைய, விமானத்துறை அமைச்சகமும், விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி செய்வது குறித்து டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவுக்கு இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விமானங்கள் பறக்கும்போது வை-ஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி வருகின்றன. இந்த வசதியை இந்திய விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடைய, விமானத்துறை அமைச்சகமும், விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி செய்வது குறித்து டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது