திருப்பதி மலையில் நேற்று ஆந்திர போலீசார் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றனர். இதுவரை இந்த அளவுக்கு ஒரே இடத்தில் 20 பேர் கொல்லப்பட்டது இல்லை. அதுவும் ஆயுதம் எதுவும் இல்லாதவர்கள் சுடப்பட்டுள்ளனர். எனவேதான் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தற்காப்பு என்ற பெயரில் 20 பேரை சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும் 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 9 பேர் பிணமாக கிடந்த இடத்தில் 7 பேர் முகத்திலும் , பின்புறத்தில் கழுத்திலும் சுடப்பட்டுள்ளனர். பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. தோல் உரிந்திருந்தது. இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.