புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு



கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் திருமாவளவன் வந்து வாழவேண்டும் என பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த கவிதா(34) என்ற பெண் கடந்த சில மாதங்களாக திருமாவளவன் மீது பரபரப்பான புகாரைக் கூறி வருகிறார்.
ஏற்கனவே கோவை கமிஷனர் அலுவலகத்திலும், சென்னையில் உள்ள பொலிஸ் டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்த இவர், இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமாவளவன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத்தொடங்கினார்.
அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன்.
என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்கிறார்.
ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும், அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர்.
என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.
என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
நான் எங்கு சென்றாலும் அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன்.
என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை பொலிசில் 10 தடவை புகார் செய்துள்ளேன்.ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.
எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவன் அலுவகத்தில் இன்று முதல் தர்ணா போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என பேசியுள்ளார்.

ad

ad