புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

சேப்பாக்கத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதல்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்
முதல் ஆட்டம் நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டுமினி தலைமையிலான டெல்லி டேர் டெவிலிஸ்சை சந்திக்கிறது.

2 முறை சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா, மேக்குல்லம், சுமித், பிராவோ, டுபெலிசிஸ், மைக்ஹஸ்சி போன்ற தலைசிறந்த வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி மோசமாக விளையாடியதால் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன.

யுவராஜ்சிங்கை ரூ.16 கோடிக்கு எடுத்தது. இதே போல ஜாகீர்கான், இலங்கை கேப்டன் மேத்யூஸ், அல்பி மோர்கல், அமித்மிஸ்ரா அந்த அணியின் புதிய வீரர்கள் ஆகும். சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாது என்பதால் மேத்யூஸ் ஆட மாட்டார்.

கேப்டன் டுமினி, குயின்டன் டிகாக், மனோஜ் திவாரி, நாதன் கோல்ட்டா போன்ற சிறந்த வீரர்களும், டெல்லி அணியில் உள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறவில்லை. டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை அணியின் உள்ளூர் ஆட்டம் நடந்தது.

தற்போது சென்னை சூப்பர் கிங்சின் உள்ளூர் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் திரண்டு வந்து அணியை வாழ்த்துவார்கள். நாளைய ஆட்டம் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

ad

ad