புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெ., அவதூறு வழக்கு



தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறி, தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். இளங்கோவனின் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாக இளங்கோவன் மீது முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்தார். இதேபோல் இளங்கோவன் பேச்சை ஒளிபரப்பிய புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ad

ad