எமது மக்கள் விடுதலையையும், விமோசனத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கி அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக எமக்கு ஆணை வழங்கியதன் மூலம், அவர்கள் தங்களின் விடுதலையையும், விமோசனத்தையும் அடைய எங்களுக்கு பணித்துள்ளார்கள் என்றார்.