புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியை தழுவியுள்ளார்


யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
கடந்த முறை தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கு  9 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை 2 ஆசனங்கள் குறைக்கப்பட்டு 7 ஆசனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இங்கு ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், ஈபிடிபி கட்சியில் வீணைச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவும், ஐதேக சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட விஜயகலா மகேஷ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர்.

ad

ad