நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்திருக்கும் 4 ஆசனங்கள் தொடர்பிலும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதிலும் தற்போது பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்களிப்புத் தினமான செப்டம்பர் 08ம் திகதி மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரி ஆகிய இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான முகவர்களும், அதிகாரிகளும், போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் நிறைந்து காணப்பட்டனர்.