புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


கூடங்குளம்: சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தடியடியை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், முக்கிய தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப்போவதாக கூறினார். ஆனால் பொதுமக்களோ, அவரை சரணடையவிட மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில், ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், சமூக ஆர்வலருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இரவு இடிந்தகரை வந்தடைந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், 'உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை அணு உலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை. அதையும் மீறி அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், போலீசில் சரணடைவதற்காக கூடங்குளம் வந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அணுஉலை எதிர்ப்பாளர்களான மக்கள், உதயகுமார் சரண் அடைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad