புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை!
 வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞரும் தற்கொலை!
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவரை குத்திக்கொன்ற காதலனும் தன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டதால் அவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுபற்றி மேலும் வருமாறு: சென்னை திருவெற்றியூர் மாணிக்கம் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தமிழன் - ஆக்னஸ் தம்பதியினர். இவர்களின் மகள் காத்திகா. வயது 23. இவர் பி.எஸ்.சி. கணினி பட்டதாரி. நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இவர்களது வீட்டின் மேல் மாடியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்ற இளைஞர் குடிவந்தார். அவர் தண்டையார்பேட்டை மகாராணி தியேட்டர் அருகே உள்ள ஒரு கார் கம்பெனியில் சர்வீஸ்மேனாக வேலை பார்க்கிறார். இவர் ஐ.டி.ஐ. வரை படித்துள்ளார். ராஜரத்தினத்தின் நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், அவரையே தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய கடந்த ஓராண்டுக்கு முன்பு கார்த்திகாவின் பெற்றோர் பேசி முடிவு செய்தனர். 

திருமண ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதால் கார்த்திகாவும், ராஜரத்தினமும் நெருங்கி பழகி வந்தனர். இதற்கிடையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ராஜரத்தினத்தின் பேண்ட் மற்றும் சட்டையை மொட்டை மாடியில் காயப்போட்டிருந்தார். மிளகாய் வத்தல் அங்கு காய வைத்திருந்த கார்த்திகாவின் தாயார் அதை எடுக்க சென்றார். அப்போது பேண்ட் பாக்கெட்டில் ஏதோ கணமான பொருள் வெளியே தெரியும்படி இருந்தது.


அது என்னவென்று அவர் எடுத்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்களும், காண்டங்களும் அதில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதைப்பற்றி ராஜரத்தினத்திடம் போன்போட்டு விசாரித்தார். ஆனால் ராஜரத்தினம் முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ சொன்னார். இதனால் கார்த்திகாவின் தாயாருக்கு சந்தேகம் வந்து, அவரின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தார். அப்போது ராஜரத்தினம் பல பெண்களுடன் தவறான தொடர்பில் இருந்ததும், போதை பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. 

இதனால் இனிமேல் இவனிடம் தன்மகளை ஒப்படைத்தால் அவளது வாழ்க்கை வீணாவிடும் என்று முடிவு செய்து திருமணத்தை வேண்டாம் என்று தடுத்தார். அதற்கான ஏற்பாடுகளை கணவர் மூலம் செய்தார். கார்த்திகாவும் தகவலை அறிந்து கொண்டபின்னர் மனம் நொந்துபோனார். அந்த வீட்டையே வாடகைக்கு விட்டுவிட்டு வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். 

இந்த இடத்தை ராஜரத்தினம் தேடி கண்டுபிடித்து அங்கு வந்து கார்த்திகாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகாவின் பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இந்த நிலையில் வழக்கம்போல இன்று காலை கார்த்திகா வீட்டில் இருந்து பேருந்தில் புறப்பட்டு பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து நந்தம்பாக்கம் செல்லும் பேருந்தை பிடிக்க காத்திருந்தார். அப்போது பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த ராஜரத்தினம், கார்த்திகாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா என்று கேட்டார். அதற்கு கார்த்திகா முடியாது என்று பதில் சொல்-விட்டு அவரை கடந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜரத்தினம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகாவின் நெஞ்சில் பலமாக குத்தினார். அதில், கார்த்திகாவின் நெஞ்சில் பாய்ந்த கத்தி பின்புற கழுத்தின் வழியாக ஆழமாக பாய்ந்து நின்றது. பின்னர் அந்த கத்தியை உருவி தன்னுடைய வயிற்றிலும் குத்திக்கொண்டார். 

இந்த சம்பவத்தினால் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கார்த்திகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வயிற்றில் ஆறு செ.மீ. ஆழத்திற்கு கத்தி பாய்ந்ததில் ராஜரத்தினமும் கவலைக்கிடமான நிலையில் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்தார். 
இறந்துபோன கார்த்திக்ôவுக்கு குமரி மாவட்டம் ஆலங்கோட்டையில் உள்ள கணபதிபுரம் ஆகும்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்

ad

ad