புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


தலமைச்சர் கனவுகண்ட பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமனம்
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான நியமிக்கப்பட்டுள்ளார்.

ழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ராஜபக்ச வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ சாரதி மரணம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி இரங்கல்!
இலங்கை  ஜனாதிபதி ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ  சாரதி விஜய்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீட் பதவிப் பிரமாணம்

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சற்று முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக் கொண்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா 19ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புது தில்லி செல்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 19ம் தேதி கூட்டுவதாக அறிவித்தது.
டி20 உலகக் கிண்ண பயிற்சி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜனாதிபதியின் ஆட்சியை கவிழ்க்க இரகசிய சூழ்ச்சித் திட்டம்: புலனாய்வுப் பிரிவு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்க இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பொலிஸில் சரண்! 24ம் திகதி வரை விளக்கமறியல்
கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பொலிஸில்

பிரிட்டன் தமிழ் உணவகமொன்றில் சட்டவிரோதமாக பணிபுரிந்த மூவருக்கு 15,000 பவுண்ட் அபராதம்
லண்டன் நகரில் உள்ள லூசியம் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கு சொந்தமான எவரெஸ்ட் உணவகத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த மூவர் பிரித்தனிய குடிவரவு குடியகல்வு அமைச்சினால் நடத்தப்பட்ட திடீர்
அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்காவிடின் அரசாங்கம் விளைவை எதிர்நோக்கும்: எம்.எஸ்.சுபைர் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர் நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான

சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் பேசமுடியாது: செல்வம் அடைக்கலநாதன்
நாங்கள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு பேசமுடியாது. தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்றபோதுதான் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் தெரிவு?
கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரச

17 செப்., 2012


மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் தீக்குளிப்பு! அவர் வழங்கிய பேட்டி உள்ளே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் தீக்குளித்த 
இளைஞர்  விஜயராஜ் நக்கீரனுக்கு  பேட்டி! (வீடியோ)




ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு (படங்கள்)

ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திடீர் சந்திப்பு
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.


கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலஙகா முஸ்லீம் காங்கிரஷிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்



பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது. 

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ad

ad