புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


தலமைச்சர் கனவுகண்ட பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமனம்
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைகளில், மீண்டும் முதல்வர் பதவியைக் கைப்பற்றுவேன் என்று சூளுரைத்த சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதும், ஜனாதிபதியினால் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.
அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படாது போனாலும், மாகாண அமைச்சர் பதவியேனும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், அவருக்கு எந்த அதிகாரங்களும் இல்லாத ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ad

ad