புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்

மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 06:18.03 AM GMT ]
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பிரதேச எல்லையில் தொண்டர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று இரவிலிருந்து தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார்.

20 செப்., 2012


முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக ஆயத்தம்?
கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதற்கு ஆயத்தமாகி

மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வீரர் அஜந்த மென்டிஸ் புதிய உலக சாதனை
இலங்கை ஹ‌ம்ப‌ாந்தோட்டையில் நே‌ற்‌றிரவு நட‌ந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இல‌ங்கை அ‌ணி ஜிம்பாப்வே அ‌ணியுட‌ன் ‌விளையாடிது.
ஜிம்பாப்வேயை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை  ஆட்டத்தில் இந்தியா வெற்றி
இலங்கையில் நடந்து வரும் 4-வது உலககோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான்
அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கம்பஹா மாவட்டத்திலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல, கட்டானை ஆகிய பல்வேறு வட்டாரங்கள் கம்பஹா மாவட்டத்துக்குள் வருகின்றன. குறிப்பாக வத்தளை, நீர்கொழும்பு ஆகிய வட்டாரங்களில் தமிழர்கள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள
சகோதரனுக்காக பதவியை இராஜினாமா செய்யும் எஸ்.எம்.சந்திரசேன
கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் (IUSF) சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறுதி ஊர்வலத்திற்கு பின் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது


ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து  இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது


தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி
சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார்.    அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும்

மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையி​டும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

முதலமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்? விளக்குகிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணை. ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகள.!
கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கையர் இன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து சுமார் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் விசா காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கிய போன்ற பலதரபட்டவர்கள் அடங்கிய சுமார் 60 பேர் இன்று பிற்பகல் பிரிட்டிஷ் எல்லை நிறுவன

19 செப்., 2012


ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு ...See More
Photo: ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். ராஜபக்சே இந்தியா வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாஞ்சி நகரில் ராஜபக்சேவுக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி. மு.க. அறிவித்தது.

இந்த போராட்டத்தை கைவிடும் படி மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வைகோவை கேட்டுக் கொண்டார். ஆனால் வைகோ மறுத்து விட்டார். திட்டமிட்டப்படி 21-ந் தேதி சாஞ்சி நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று பிற்பகலில் சென்னை அண்ணா சமாதி முன்பிருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் வைகோ தலைமையில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அனைவரும் கறுப்பு கொடிகளுடன் சென்றனர். 21-ந்தேதி சாஞ்சியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத் அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..
Photo: இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத்  அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..

ad

ad