-
18 ஜன., 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென்னாபிரிக்கப் பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து சீ-4 வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.
மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார்- தலைமன்னார் வீதியில், கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவத்தில் ஆண்கள் நான்கு பேரும், பெண்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியத்தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்த சிங்கள படைச்சிப்பாய்!- பெருமிதத்தில் தமிழினம்
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர்
மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு! டிரேட் மார்க் துணை பதிவாளர் தகவல்! விவசாயிகள் வரவேற்பு
நறுமணம் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாக விளங்கும் இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படுவதாக டிரேட் மார்க் துணை
புதிய பிரதம நீதியரசரால் தொடர்ந்து நிலைக்க முடியுமா?
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது.பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்குஇணையத்தளம் முடக்கப்பட்டதா? எனக்கு தெரியாது: ஊடகத்துறை அமைச்சர்
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது. என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாள
17 ஜன., 2013
இலங்கை அரச புலனாய்வில் ஐ.பி.சி ரோடியோவின் பங்கு என்ன ?
நேற்றைய தினம், இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை அது இயங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதனைத் தாக்கி ஊடறுத்த நபர்கள், அதிலுள்ள பல விடையங்களை தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். (இதனை எவராலும் பார்வையிடமுடியும்)
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)