காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!
-
27 ஆக., 2013
இறுதிக் கட்டப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னைச் சந்தித்த போது தெரிவித்ததாக யாழில் எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார்.
யாழில் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் எழிலனின் மனைவி ஆந்தியைச் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதாகவும், இதில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜ.நா விசேட கவனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது
அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்துக: யோகேஸ்வரன் எம்.பி. அரசாங்க அதிபருக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தில் பௌத்த அடையாளங்களோ பௌத்த குடும்பங்களோ இல்லாத தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற
பிரபாகரன் நடாத்திய வீரம்செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது: வீரபுரத்தில் ரதன் முழக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!
யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்
26 ஆக., 2013
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)