புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

நியூயோர்க் ஐ.நா சபையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் 68வது வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டத்தொடரின் இன்று 1 மணிக்கு தனது உரையினையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அவர்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நாட்டின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியையும், நல்லிணக்க
அனந்தியின் வீட்டின் மீது முன்னாள் புலிகளே தாக்குதல் நடத்தினர்!– திவயின - 
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனந்தி சசிதரனின் வீட்டின் மீது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வல்லிபுனத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த்து.
ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி ராமதாஸ் ஆற்றிய உரை
இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது: ஒப்புக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.
Raghuvannan-marriage-Photo
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய

கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக
, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். இந்த தேர்தல்கள் நடந்த விதத்தை நேரடியாக கண்காணித்த கொமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்
கென்யத் தலைநகர் நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வர்த்தக வளாகம், தீவிரவதிகளின் முற்றுகைக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிlல், இவ்வளாகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில் ஆயுததாரிகள் யாரும் எஞ்சியிருக்கிறார்களா என்று வர்த்தக வளாகத்திற்குள் துருப்பினர் தேடிவருகின்றார்கள்.BBC
செவ்வாய்க்கிழமை காலையிலும்கூட அந்த இடத்தில் வெடிச்சத்தமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டிருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பின்னர் கூறினார்.
இந்த வாரமும் , கடந்த வாரமும் "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டின் பத்தி எழுத்தாளர் "Rosie DiManno" இலங்கை நிலவரங்களை நேரில் சென்று அவதானித்துக் கட்டுரைகளை அங்கிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். இன்று அவர் எழுதி "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தலைப்பு "New era begins after Tamils win key election". அந்தக் கட்டுரையில் // Tamils were not bought off by the extensive reconstruction, all the multi-millions - from China, mostly-poured into new roads , new infrastructure, new hospitals, new commercial buildings, even a new sports stadium that's going up outside the new trail station.// இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா

போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின்

பாரதிய ஜனதாவில் ரஜினி. விஜயகாந்த் அதிர்ச்சி. ஜி.கே. வாசன் உள்பட பல தலைவர்கள் ரஜினியுடன் இணைய அதிரடி முடிவு

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக “சோ” அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 
காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா–தே.மு.தி.க.–ம.தி.மு.க. ஓரணியில் திரள வேண்டும்: தமிழருவி மணியன் பேட்டி
காந்தீய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து வரும் கச்சத் தீவு பிரச்சினை,
திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:-
16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, அமிதாப், ஸ்ரீதேவி உட்பட 41 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் பிரணாப் முகர்ஜி
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை தாக்கல்

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் - இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ad

ad