புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா

போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின்
உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்து இடங்களுக்கள் தெரிவு செய்யப்படாத நிலமை காணப்பட்டது. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்க பாரிய அடியாக இருந்ததுடன் பாரிய கௌரவக் குறைவாகவும் காணப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் சில முடிவுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் மற்றும் யாழ் மாவட்டத்தின் அமைப்பாளர் வேண்டுதலின் பெயரில் எடுக்கப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற வாக்கு எண்ணும் பணியில் கட்சிகளுக்கான வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் அனைத்தம் மதியத்துடன் நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரை தெரிவு உறுப்பினராக மாற்றும் பணிக்காக பிற்பகல் வரை விருப்ப வாக்கு விடயத்தில் கணக்கு பிழைப்பதாகக் கூறி உயர் அதிகாரிகளினால் இழுத்தடிப்புகள் நடை பெற்றுக் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்த வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் குறிப்பிட்ட 2ம் 3ம் 4ம் இடங்களை பெற்றவர்களை நீக்கி ஐந்தாம் இடத்தில் உள்ளவரை முன்னுக்கு கொடுவரும் நடவடிக்கையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணரீதியாகவும் சற்று உருட்டல் மிரட்டலாகவும் கதைத்து உரிய மாற்றங்களை செய்துள்ளார்கள்.
இதற்கான பிரதியீடாக சுமார் ஐந்து கோடி ரூபா கைமாறியுள்ளதாகவும் குறிப்பி;ட்ட வட்டாரங்களின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மூலம் தெரியக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவெ ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் வெற்றி பெற்ற உறுப்பினாகளாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கமல் மற்றும் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளர் சாள்ஸ் வடமராட்சி பொறுப்பாளர் மற்றும் தவராசா ஆகியோர் காணப்பட்டார்கள்.
இதனை தேர்தல் முடிவடைந்த அன்று பிற்பகல் வெளியான விசேட பதிப்பு தினக்குரல் பத்திரிகை ஐக்கிய மக்;கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றவர்கள் கமல் மற்றும் சாள்ஸ் என வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி யாழ் மாவட்டதின் சுதந்தரிக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் பணத்தினாலும் அதிகாரத்தினாலும் கொண்டுவரப்பட்டு அவர் பெற்ற வாக்குகள் பத்தாயிரத்திற்க்கு மேல் எனவும் காணக்கிடப்பட்டுள்ளது.இதே வேளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள் குறிப்பி;ட்ட அங்கஜன் இராமநாதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நாலாயிரத்திற்க்கும் குறைவானது என்றும் தற்போது எவ்வாறு பத்தாயிரத்திற்க்கு மேற்பட்டதாக மாறியது என்று.
இத்தகைய கைங்கரியத்தை மேற்க்கொள்வதற்க்கு இடம் கொடுத்த ஈழ மக்கள் ஜனநாயக்கக் கட்சியின் பொதுக் செயலாளரின் இத்தகைய நடவடிக்கை தமிழ் மக்களிடைய பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருடைய வாக்க வங்கியும் கூட தமிழ் மக்களிடம் இருந்து குறைந்து செல்கின்றமையும் குறிப்பி;டத்தக்கதாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வெற்றி மூன்றாவதாக தெரிவ செய்யப்பட்ட பசுபதி சீவரத்தினம் தெரிவு செய்யப்படாது இறுதி நேரத்தில் விருப்பு வாக்குளில் மோசடிகள் செய்யப்பட்டு மு.சந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை நிரூபிக்கும் வகையில் மல்லாகம் ரவி என்பவரினால் சவால் விடுத்து போதிலும் இதனை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறுக்கவிலலை. மேலும் இத்தகைய மோசடி இடம் பெற்றமையால் இம்முறை பனை அபிவிருத்தி சபையின் தலைவராக இருக்கும் பசுபதி சீவரத்தினம வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியனால் நிறுத்த முற்பட்ட போதிலும் இதனை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில் மறுத்து உள்ளார்.
இதனை அவரே அவருடன் மிகவும் நெருக்கமாக பழகுபவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையறு நிலையில் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் அரசுடன் இனைந்து காணப்படுவதாகவும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தமிழ் இனத்தை இத்தகைய செயல்களுக்கு ஒத்துப்போய் விற்று வருவதாகவும் பாரியளவிலான குற்றச்சாட்டுக்கள் பொது மக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எதுவாக இருந்தாலும் சிங்கள பேரினவதத்திற்க்கு ஒத்தூத புறப்பட்டு இன்று தனது ஆதரவாளர்களையே இழந்து தமிழ் மக்கள் மத்தியில் தலை குனிந்து வாழும் நிலமைக்கு டக்ளஸ் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி உறுப்பினாகளிடம் கூட இத்தகைய தில்லு முள்ளு பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad