பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம் |
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். |
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். |
-
25 டிச., 2013
எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை
வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்; வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,
24 டிச., 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி? |
வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். |
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று. சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)