புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2014

இலங்கை எதிர் இங்கிலாந்து  நேரடி ஸ்கோர்  விபரம் 5  விக்கெட்டுக்கள் வீழ்ந்தன இலங்கை அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் வரிசையாக  சாதிகிறார்கள் .பிரியஞ்சன்,மென்டிஸ் ,மாலிங்கா ,மத்தியூஸ் சேனநாயக்கா ,டில்சான் குலசேகரா .இங்கிலாந்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html

England 142/5 (30.5 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

கலைஞரின் பிறந்தநாளுக்கு வைரமுத்துவின் பேட்டி




கலைஞருக்கு ரஜினி  வாழ்த்து
திமுக தலைவர் கலைஞர் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
 வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது

 சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு 
 தன்னியக்க  கருவி மூலம் இயங்கும்  சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில்  100 /2  விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ்  டில்சான்  பிரியஞ்சன் மாலிங்கா  என மாறி மாறி   பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் 
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்

கோபிநாத் முண்டே மறைவு: இரங்கல் தெரிவிக்க கூடுகிறது மத்திய அமைச்சரவை
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே செவ்வாய்க்கிழமை காலை விபத்தில் காலமானார். (வயது 64). டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்போது

மோடி - ஜெயலலிதா சந்திப்பு .முந்திக் கொண்டு மகிந்த இந்திய மீனவர்களை  விடுவித்தார் 
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். 
மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின 
இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கல்முனையில் 48 பயணிகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து 
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை

ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 ஜூன், 2014

வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் 
news
 மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையை 8ஆம் தேதி 8,000 பேர் சுத்தப்படுத்துகிறார்கள்
சென்னை கடற்கரை பகுதியை வரும் 8ஆம் தேதி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

ad

ad