புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2014

யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு 
 தன்னியக்க  கருவி மூலம் இயங்கும்  சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.


இது குறித்து விடுதி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் அந்த விமானத்தை மீட்டுச் சென்றுள்ளனர்.
 
குறித்த சிறிய ரக  விமானம் நேற்று மாலை விடுதி முன்பாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை  இந்த விமானம் ஒன்றை தமது தேவைக்காக யாழ்.நகர்ப் பகுதியில் பறக்கவிட்டதாகவும் அது காணாமற் போயுள்ளதாக தெரிவித்த மொபிடெல் தொலைத்தொடர்பு நிறுவனம்   ஒன்றின் ஊக்குவிப்பு குழு யாழ்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
 
மேலும் இந்த விமானம் பறக்கவிடப்பட்டதன் நோக்கம் தமது ஊக்கவிப்பை பலப்படுத்தவே என மொபிடெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் ஊக்குவிப்பு குழு யாழ்.பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
 
மேற்படி இதனை உறுதிப்படுத்திய யாழ்.பொலிஸார் அந்த சிறிய விமானத்தை மீளவும் அவர்களிடமே கையளித்தனர்.

ad

ad