தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.