புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

பாடசாலைப் பெண்களுக்கு பியரைக் கொடுத்து பாலியல் உறவு : கைதான 8 பேரில் தமிழர்களுமா

பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு
பலசரக்கு கடையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பியர் வாங்குவது வழக்கமாம்.
வயது குறைந்த இந்த மாணவிகளுக்கு கடை உரிமையாளர் பியரை மட்டும் விற்கவில்லை. ஓசியாக பியரைக் கொடுத்து அவர்களில் பலரை வளைத்துப் போட்டுள்ளார்.
பின்னர் அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார். தனது நண்பர்களோடு , குறித்த மாணவிகளை பகிர்ந்துள்ளார். வயது குறைந்த மாணவிகளுக்கு எப்படி பியர் கிடைக்கிறது என்று ஆராயத்தொடங்கிய சில பெற்றோருக்கு தொடர்சியாக அதிர்ச்சிதான் காத்திருந்துள்ளது.
அவர்கள் ஒருவரோ இல்லை இரண்டு பேர்களோ இல்லை. பல மாணவிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று கண்டறிந்த பெற்றோர், உடனே பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.
சுமார் 60 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது என்று பொலிசார் தற்போது உறுதிசெய்துள்ளார்கள்.
இன் நிலையில் கடை உரிமையாளர் மற்றும் அவரது , நண்பர் இருவரும் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. எனினும் இதனை சரியாக உறுதிசெய்ய முடியவில்லை.


- See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=38693&cat=sports&sel=current&subcat=5#sthash.5xgHut3t.dpuf

ad

ad