புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014


வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்
முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன், பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று உரையாற்றியிருந்தார்.
இவ்வுரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் இதனடிப்படையில் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ad

ad