புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி
ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண, பயணிகள் வான் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
சம்பவத்தின் போது 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வான் சாரதியின் கவனக் குறைவே இவ்விபத்துக்கான காரணமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
அத்துடன், வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ad

ad